காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் !!

காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம்..!
ஒரு ஞானியை அணுகிய சீடன்காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வித்தியாசம் என்னவெனக் கேட்டான்.
அதற்கு அந்த ஞானி, "து இருக்கட்டும்முதலில் நீ ரோஜாத் தோட்டத்துக்குப் போஅங்கே உனக்கு எது உயரமான ரோஜாச் செடி என்று தோன்றுகிறதோஅதை எடுத்துக் கொண்டு வாஆனால் ஒரு நிபந்தனைநீ எக்காரணம் கொண்டும் போன வழியே திரும்பி வரக் கூடாது." என்றார்.
கிளம்பிய சீடன் சிறிது நேரம் கழித்து வெறும் கையுடன் வந்தான்ஞானி, "எங்கே உன்னைக் கவர்ந்த உயரமான செடி? " என்று கேட்டார்.
சீடன் சொன்னான், "குருவேவயலில் இறங்கி நடந்த போது முதலில் உயரமான ஒரு செடி என்னைக் கவர்ந்ததுஅதை விட உயரமான செடி இருக்கக் கூடும் என்று தொடர்ந்து நடந்தேன்இன்னும் உயரமான ரோஜாச் செடிகள் தென்பட்டனஅவற்றை விட உயரமான செடிகள் இருக்கக் கூடுமென மேலும் நடந்தேன்அதன் பிறகு தென்பட்டதெல்லாம் குட்டையான ரோஜாச் செடிகளேவந்த வழியே திரும்ப வரக்கூடாது என்பதால் முன்னர் பார்த்த உயரமான செடியையும் கொண்டு வர முடியாமல் போய் விட்டது."
புன்முறுவலோடு ஞானி சொன்னார், "இது தான் காதல்...!".
பின்னர் ஞானி, "சரி போகட்டும்அதோ அந்த வயலில் சென்று உன் கண்ணுக்கு அழகாகத் தெரிகின்ற ஒரு சூரிய காந்திச் செடியைப் பிடுங்கி வாஆனால் இப்போது கூடுதலாக ஒரு நிபந்தனைஒரு செடியைப் பிடுங்கிய பின் வேறு ஒரு செடியைப் பிடுங்கக் கூடாது."
சிறிது நேரத்தில் சீடன் ஒரு சூரிய காந்திச் செடியுடன் வந்தான்ஞானி கேட்டார், "இது தான் அந்தத் தோட்டத்திலேயே அழகான சூரிய காந்திச் செடியா..? "
சீடன் சொன்னான், "இல்லை குருவேஇதை விட அழகான செடிகள் இருக்கின்றனஆனால் முதல் முறை கோட்டை விட்டது போல் இந்த முறையும் விட்டு விடக் கூடாது என்ற அச்சத்தில் முகப்பிலேயே எனக்கு அழகாகத் தோன்றிய இந்த செடியைப் பிடுங்கி வந்து விட்டேன்நிபந்தனைப்படிஒரு செடியைப் பிடுங்கியபின் வேறு செடியைப் பிடுங்கக் கூடாது என்பதால் அதன் பிறகு இதை விட அழகான செடிகளை நான் பார்த்தபோதும் பறிக்கவில்லை".
இப்போது ஞானி சொன்னார், "இது தான் திருமணம்.....



Comments

Popular posts from this blog

தொழில் முனைவோருக்குத் தேவையான 8 தகுதிகள்...

உங்கள் கணவரிடம் எப்பொழுது கடைசியாக "I LOVE YOU" என்று சொன்னீர்கள் என்று கேட்டார்.!

பயமும் தப்பு... தப்பா கத்துக்கவும் கூடாது!' அனிமேஷன் ப(பா)டம்